தமிழில் பெயர் பலகை(name board) வைக்காத தனியார் நிறுவனங்களுக்கு 2000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை(Madurai High Court) கிளையில் வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு தாக்கல் செய்து இருந்தார்.
அந்த மனு மீதான விசாரணை மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது, இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், தமிழில் பெயர் பலகை வைக்காத தனியார் நிறுவனங்களுக்கு 50 ரூபாய் விதிக்கப்பட்ட அபராத தொகை, இனி மேல் 2000 ரூபாயாக உயர்த்தி வசூலிக்க விரைவில் அரசாணை பிறப்பிக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழில் பெயர் பலகை வைக்காத பல நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது தொடர்பான முழு அறிக்கை தாக்கல் செய்ய தொழிலாளர் நலத்துறை செயலாளருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.