ITamilTv

கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்ஐ கைது செய்யக்கோரி கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷம் – ஓபிஎஸ் ஆதரவாளர்!!

Spread the love

கொடநாடு கொலை வழக்கில் இபிஎஸ்ஐ கைது செய்யக்கோரி கண்டன கோஷம் முழங்கியவாறு கருப்பு சட்டை அணிந்து கண்டன கோஷம் எழுப்பிய ஓபிஎஸ் ஆதரவாளர்..

கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக உரிய நபர்களை கைது செய்யக்கோரி இன்று தேனி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தலைமையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரக்கூடிய வேளையில்,

மதுரை ஆண்டாள்புரம் பகுதியில் இருக்கக்கூடிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஓபிஎஸ் ஆதரவாளரான மதுரை மத்திய தொகுதியை சேர்ந்த மிஷா செந்தில் என்பவர் கையில் பதாகைகளுடன் கண்டன கோஷங்களை வழங்கினார்.

குறிப்பாக கொடநாடு கொலை வழக்கு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரை இன்று முதல் தொடர்ந்து கருப்பு சட்டையை அணிவேன் என்று கூறியவாறு, இபிஸுக்கு எதிராக கண்டன கோஷங்களை வழங்கினார்.

கைகளில் வைக்கப்பட்டிருந்த பதாகைகளில் கொடநாடு அம்மா இல்லத்தில் கொலையும் கொள்ளையும் அடிக்கச் சொன்ன எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்யும் வரை இன்று முதல் கருப்பு சட்டை அணிவோம்.

கைது செய்யவில்லை என்றால் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும் என்று எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கோஷங்கள் முழங்கினர். தொடர்ந்து, தேனியில் நடைபெறும் போராட்டத்திற்கு புறப்பட்டு சென்றனர்.


Spread the love
Exit mobile version