Site icon ITamilTv

உ.பி. விவசாயிகள் கொல்லப்பட்ட விவகாரம்: ஜனாதிபதியை சந்திக்கும் காங். தலைவர்கள்

Spread the love

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்ட விவகாரத்தில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் தலைவர்கள் குழு நாளை சந்திக்கின்றனர்.
விவசாயிகள் கொல்லப்பட்டதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை வைப்பதற்காக இந்த சந்திப்பு இருக்கும் என தெரிகிறது.
மேலும் சம்பவத்திற்கு காரணமான ஒன்றிய அமைச்சர் அஜய் மிஸ்ராவை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் கோரிக்கை வைத்துள்ளது. இந்த நிலையில்,இது தொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்-ஐ ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் குழு நாளை காலை 11.30 மணிக்கு சந்திக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் கடந்த 3-ம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாகினர்.
இந்த சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ராவும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.எனவே அவரை கைது செய்து உபி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒன்றிய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை போலீசார் தங்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று முதல் 3 நாட்கள் போலீஸ் காவலில் அவரிடம் விசாரணை நடத்த லக்கிம்பூர் நீதிமன்றம் நேற்று அனுமதி அளித்தது.

 


Spread the love
Exit mobile version