Site icon ITamilTv

4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் தொடரும் – பாலச்சந்திரன் அதிர்ச்சி தகவல்..!!

Spread the love

தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் தொடரும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையின் இன்று செய்தியாளர்களை சந்தித்த பாலச்சந்திரன் கூறியதாவது:

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது அதன் காரணமாக இன்று தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கோயம்புத்தூர், திண்டுக்கல், நீலகிரி, மதுரை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

1931ம் ஆண்டுக்குப் பிறகு பாளையங்கோட்டை பகுதியில் அதிகமழை பதிவாகியுள்ளது

90 செ.மீ மழை பெய்யும் என குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ரெட் அலர்ட் என்றால் 21 செ.மீ அளவுக்கு மேல், எவ்வளவு வேண்டுமானாலும் மழை பெய்யலாம். மேலடுக்கு சுழற்சி காரணமாக இவ்வளவு மழை பெய்தது இதுவே முதன்முறை

தென் தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் தொடரும் . கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 94 செ.மீ மழை பதிவாகியுள்ளது


Spread the love
Exit mobile version