தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு ரெட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் விளக்கப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் நிலவும் ( red alert for tn ) வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமான தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
Also Read : ஜி.எஸ்.டி.வழக்குகளில் கைது தேவையில்லை – உச்ச நீதிமன்றம் அதிரடி..!!
கோவை, தேனி, நீலகிரி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கன முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் மே 20ஆம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 50 கி.மீ. வேகம் வரை தரைக்காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பாக முன்னெச்சரிக்கையுடன் இருக்கும்படி இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.