Site icon ITamilTv

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பற்றி தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம்..!!

20 lakh reward

20 lakh reward

Spread the love

காஷ்மீரில் இந்திய விமானபடைக்கு சொந்தமான வாகனத்தின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் பற்றி ( 20 lakh reward ) தகவல் தந்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என பாதுகாப்புப் படை அறிவித்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஜம்மு காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தின் சுரான்கோட் பகுதி வழியாக, இந்திய விமானப் படை வீரர்கள் இரண்டு வாகனங்களில் சென்றனர்.

விமானப் படை தளத்துக்கு சென்ற அவர்களது வாகனங்கள் மீது, அப்பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தினர் . இந்த தாக்குதலில் ஐந்து விமானப் படை வீரர்கள் காயமடைந்தனர்.

Also Read : உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு’ நிகழ்ச்சி இன்று முதல் தொடக்கம்..!!

காயமடைந்த வீரர்கள் அனைவரும் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

இந்நிலையில் விமானப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், 2 பேரின் மாதிரி புகைப்படங்களை பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.

இதுமட்டுமின்றி இவர்கள் பற்றி தகவல் தந்தால், 20 லட்சம் ரூபாய் வெகுமதி வழங்கப்படும் ( 20 lakh reward ) எனவும் தகவல் தெரிவிப்பவர்கள் விவரம் ரகசியம் காக்கப்படும் என்றும் பாதுகாப்போடு படை அறிவித்துள்ளது .


Spread the love
Exit mobile version