Site icon ITamilTv

Saidai Duraisamy Son | 8 நாட்களுக்குப் பின் வெற்றி துரைசாமி உடல் மீட்பு!

Saidai Duraisamy Son

Saidai Duraisamy Son

Spread the love

Saidai Duraisamy Son | இமாச்சலப் பிரதேசம் : கார் விபத்தில் சட்லெஜ் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட வெற்றி துரைசாமியின் உடல் 8 நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகனான வெற்றி துரைசாமி தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் இமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்றார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இருவரும் உணவகம் ஒன்றில் சாப்பிட்டுவிட்டு மாலை நேரத்தில் வாடகை காரில், கின்னார் மாவட்டம் காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது போது ஓட்டுநர் டென்சினுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் கார் நிலைதடுமாறி 200 ஆடி பள்ளத்தில் சரிந்து சட்லஜ் நதிக்குள் பாய்ந்தது.

இந்த விபத்து குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர்,

காவல்துறையினருடன் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த கோர விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையும் படிங்க: வெற்றி துரைசாமி விபத்து ! DNA முடிவுகள் நாளை வெளியாக வாய்ப்பு- Kinnaur District Collector

ஓட்டுநரின் உடல் திங்கள் கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கோபிநாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

ஆனால் வெற்றி துரைசாமிக்கு என்ன ஆனது என தெரியாத நிலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர், தீயணைப்பு துறையினர், கடற்படையினர் என பல்வேறு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

மேலும் சட்லஜ் நதிக்கரையில் நீர்வரத்து அதிகமாக இருந்து வருவதால் தேடுதல் பணியில் காலதாமதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தக்கறை, திசுக்கள் டிஎன்ஏ சோதனைக்காக அனுப்பி வைகப்பட்டது.

இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1756994631013744958?s=20

விபத்து எப்படி நடந்தது என்பதை விவரிக்கும் விதமாக அவரைப் போல DEMO பொம்மையை ஆற்றில் வீசி,

விபத்து நடந்தபின் உடல் எவ்வழியாக நதியில் சென்றிருக்கும் என தெரிந்து கொள்ள மீட்புக் குழுவினர் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், வெற்றி துரைசாமியை தேடும் பணி 8 வது நாளாக தொடர்ந்த நிலையில், வெற்றி துரைசாமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு குழு , ராணுவம் மற்றும் கடற்படையை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் தேடுதல் பணியை தீவிரமாக செய்துவந்த நிலையில்,

விபத்து நடந்த இடத்திலிருந்து 6 கி மீ தொலைவில் உள்ள சட்லஜ் ஆற்றில் உடல் கிடைத்துள்ளது.


Spread the love
Exit mobile version