ITamilTv

”சிங்கப்பூர் அதிபராகும் தர்மன் சண்முகரத்னம்..” சசிகலா வாழ்த்து..!

Spread the love

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு.தர்மன் சண்முகரத்னதிற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார். சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினம் அதிபர் தேர்தலில் வென்றதன் மூலம் அந்நாட்டின் புதிய அதிபராக பதவியேற்க உள்ளார்.அதிபர் தேர்தலில் 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு.தர்மன் சண்முகரத்னதிற்கு சசிகலா வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

சிங்கப்பூர் நாட்டின் 9வது அதிபராக தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்கள் அங்கு நடைபெற்ற அதிபர் தேர்தலில் அபார வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. திரு. தர்மன் சண்முகரத்னம் அவர்களுக்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

சிங்கப்பூரில் உள்ள அரசியல்முறைகள், ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளால் சிங்கப்பூர் உலகில் ஒரு செல்வாக்கு உள்ள நாடாகவும், சிறந்த தொழில் மற்றும் திறமையாளர்களை கொண்ட நாடாகவும் திகழ்கிறது. இந்த சிறப்புக்குரிய சிங்கப்பூர் நாட்டை ஆளும் பொறுப்பை தமிழரான திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்கள் ஏற்கப்போவது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியையும், பெருமையையும் அளிக்கிறது.

சிங்கப்பூரின் நிதியமைச்சர், கல்வி அமைச்சர், பிரதமரின் ஆலோசகர் மற்றும் துணை பிரதமர் போன்ற பல்வேறு முக்கிய பதவிகளில் திறம்பட பணியாற்றி, தனது தனித்திறமையை நிரூபித்துள்ள திரு.தர்மன் சண்முகரத்னம் அவர்கள் தற்போது சிங்கப்பூரின் அதிபராக தேர்வாகியிருப்பதற்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version