ITamilTv

“இனி, ஆக்ஸிஜன் கொடுக்க முடியாது!” – இரட்டை இலை வழக்கில் ஓ.பி.எஸ்.சுக்கு அதிர்ச்சி!

double leaf case

Spread the love

double leaf case : “இரட்டை இலை சின்னத்தை நானும் பயன்படுத்த அனுமதி தாருங்கள்” என்ற ஓ.பி.எஸ்.சின் கோரிக்கைக்கு, “அது எங்க கிட்டே இல்லீங்க” என நீதிமன்றமே கை வித்த சம்பவம் ஓ.பி.எஸ். தரப்பிற்கு அதிர்ச்சியை தாரை வார்த்துள்ளது.

அதிமுகவில் இருந்து விலக்கப்பட்ட ஓ.பி.எஸ். எடுத்த சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் அவருக்கு எதிரான முடிவுகளையே தந்த நிலையில், ‘அதிமுக மீட்புக்குழு’ என்ற ஒன்றைத் துவங்கி எடப்பாடி பழனிச்சாமி வசம் இருக்கும் அதிமுகவை மீட்கும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறார் ஓ.பி.எஸ்.

தவிர, ஒரு அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய உட்கட்டமைப்புகளான மாவட்ட செயலாளர்கள் முதல் கிளைக்கழக செயலாளர்கள் வரை ஓ.பி.எஸ். தனக்கென தனி விங் அமைத்து செயல் பட்டாலும், அரசியல் கட்சி எதையுமே தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யாததால் ஓ.பி.எஸ். அணி என்ற ஒரு அணியாக மட்டுமே அவரால் செயல்பட முடிகிறது.

இதையும் படிங்க : இரட்டை இலை வழக்கு – இன்று முக்கிய தீர்ப்பு!!

இந்நிலையில், பாஜகவின் தீவிர விசுவாசியாக மாறியிருக்கும் ஓ.பி.எஸ்.சுக்கு தற்போது ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது பாஜக தலைமை. அதே நேரத்தில், பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப் படுவதற்கு முன்பாகவே,

“இரட்டை இலை சின்னத்தில்தான் போட்டியிடுவோம்” எனவும், “இரட்டை இலையை முடக்குவோம்” எனவும் அடிக்கடி கூறி வந்தார் ஓ.பி.எஸ். எனவே, ‘அதிமுகவில் இருந்து நிரந்தரமாக விலக்கப்பட்ட ஓ.பி.எஸ்.,

கட்சியின் கொடி, சின்னம் மற்றும் லெட்டர் பேட் உள்ளிட்ட அடையாளங்களை பயன்படுத்த தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடினார் double leaf case.

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த அந்த வழக்கில், கட்சியின் லெட்டர் ஹெட், சின்னம் மற்றும் கொடியை ஓ.பி.எஸ். பயன்படுத்த தடை விதித்து கடந்த நவம்பர் 7, 2023 அன்று இடைக்கால உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி சதீஷ்குமார்.

இதனை எதிர்த்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இம்மாதம் 18ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி சதீஸ் குமாரின் இடைக்கால உத்தரவை உறுதி செய்து ஓ.பி.ஏஸ்.சுக்கு ஏமாற்றத்தை அளித்தனர்.

இதனால், இரட்டை இலையில் தான் போட்டி என திரும்பத்திரும்ப கூறி வந்த ஓ.பி.எஸ். தேர்தல் ஆணையத்தின் மூலம் இரட்டை இலை சின்னத்தை தனக்கு ஒதுக்க வைக்க உள்ள சாத்தியக்கூறுகள் பற்றி தனது வழக்கறிஞர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தத் துவங்கினார்.

அதன்படி, தற்போது பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் போட்டியிட தயாராகி வரும் ஓ.பன்னீர் செல்வம் கடந்த வாரம் புதியதொரு மனுவையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதில், “ஓ.பி.எஸ். ஆகிய நான் அதிமுகவில் வகித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகி விட்டதா? இல்லையா? என்பது குறித்து நிலுவையில் உள்ள மூல வழக்கில் தான் முடிவு செய்ய முடியும் என ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும் கூறி உள்ளது.

தவிர, கடந்த 42 ஆண்டுகளாக அ.தி.மு.க.வின் அடிப்படை தொண்டர், முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்த எனக்கு, கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்தது ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்களோ, அல்லது கட்சியின் தொண்டர்களோ புகார் அளிக்காத நிலையில் எடப்பாடி பழனிசாமி தனிப்பட்ட முறையில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் முழுமையாக அங்கீகரிக்கவில்லை. இரண்டு விதமான கட்சி விதிகளை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளது.

 double leaf case
ஓ.பன்னீர் செல்வம்

எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

ஓ.பி.எஸ். தாக்கல் செய்த இந்த மனுவானது இன்று ( 25.03.2024) நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, “ஏற்கனவே இது போன்ற ஒரு சூழலில்,

இரட்டை தனது தலைமையில் இருந்த மதுசூதனனுக்கே இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியது என ஓ.பி.எஸ். தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு “எங்களால் இப்போது ஆக்சிஜன் கொடுக்க முடியாது” என நீதிபதி ஆர்.சுப்பிரமணியன் தெரிவிக்கவே, “அட்லீஸ்ட் மாஸ்க்காவது கொடுங்க” என்று கோரிக்கை விடுத்தார் ஓ.பி.எஸ். தரப்பு மூத்த வழக்கறிஞரான அரவிந்த் பாண்டியன்.

இதனை தொடர்ந்து பேசிய நீதிபதி; “அதிமுக சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பி.எஸ்.க்கு தடை விதித்தது தொடர்பாக இடைக்கால ஆணை பிறப்பிக்க முடியாது.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர்செல்வம் முறையிடலாம்” எனக் கூறி, மேல்முறையீட்டு மனு குறித்து பழனிசாமி பதில் அளிக்கவும் உத்தரவிட்டார்.

மேலும், இவ்வழக்கானது இறுதி விசாரணைக்காக ஜூன் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப் படுவதாகவும் உத்தரவிட்டார் double leaf case.

இரட்டை இலை வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் இந்த முடிவால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறது ஓ.பி.எஸ். தரப்பு.

இதையும் படிங்க : “ஓபிஎஸ் இரட்டை இலையை பயன்படுத்த தடை தொடரும்”


Spread the love
Exit mobile version