ITamilTv

shraddha murder case update:ஷ்ரத்தா கொலை : தலையை அழுக செய்து..மண்டை ஓட்டை மிக்ஸியில் அரைத்து.. – காதலன் பரபரப்பு வாக்குமூலம்

Spread the love

கடந்தாண்டு காதலனால் 32 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா கொலை வழக்கில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

டெல்லியில், காதலியை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் (fridge) வைத்து 18 நாட்களாக நகர் முழுவதும் எறிந்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

டெல்லியில், ஷ்ரத்தா என்ற பெண்ணும் அப்தாப் என்பவரும் மும்பையில் உள்ள ஒரு கால் சென்டரில் பணிபுரிந்து வந்தனர். அப்போது இருவருக்கும் இடையில் நட்பு ஏற்பட்டு உள்ளது. பின்னாளில், அவர்களது நட்பு காதலாக மாறியது.

இதனையடுத்து, அவர்களது காதலுக்கு இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த ஜோடி டெல்லிக்குச் சென்றுள்ளனர்.

fridge

அங்கு அவர்கள் மெஹ்ராலியில் தனியாக வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்தாப்பை ஷ்ரத்தா அடிக்கடி வற்புறுத்தி வந்துள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக இருவருக்குள்ளும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடந்த மே மாதம் அப்தாப் ஷ்ரத்தாவை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார். பின்னர், ரம்பத்தை கொண்டு அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி உள்ளார்.

பின்னர், ஒரு பெரிய பிரிட்ஜ் வாங்கி அதில் வைத்து 18 நாட்களாக டெல்லி முழுவதும் அவற்றை ஒவ்வொன்றாக தூக்கி எறிந்து உள்ளார்.இந்த நிலையில் ஷ்ரத்தாவின் குடும்பம் சமூக வலை தளங்கள் மூலம் அவர்கள் இருக்கும் இடத்தை அறிந்தது கொண்டதையடுத்து, ஷ்ரத்தாவின் தந்தை அவரை பார்க்க டெல்லிக்கு வந்துள்ளார்.

ஆனால், ஷ்ரத்தாவை தொடர்பு கொள்ள முடியாததால் போலீசில் புகார் செய்து உள்ளார். இதையடுத்து, போலீசார் ரகசிய தகவலின் பேரில் அப்தாபை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையின் போது, தன்னை திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் ஷ்ரத்தாவை கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் (fridge) வைத்து 18 நாட்களாக நகர் முழுவதும் எறிந்ததாக ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக  ஷ்ரத்தா கொலையில் அவரது தலை பகுதி கிடைக்கவில்லை என்று காவல் துறையினர் தரப்பில் தெரிவிக்கபட்டு இருந்தது.

ஆனால்  தற்பொழுது  கடந்தாண்டு காதலனால் 32 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஷ்ரத்தா கொலை வழக்கில் டெல்லி காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகை தாக்கல் செத்துள்ளனர்.

அதில் கொலை செய்த காதலியின் தலை அழுகி எலும்புகளாக மிஞ்சிய பிறகு அதனை மிக்ஸியில் அரைத்து அப்புறப்படுத்தியதாக காதலன் பூனவல்லா வாக்குமூலம்  அளித்ததாக தெரிவிக்கபட்டுள்ளது.


Spread the love
Exit mobile version