Site icon ITamilTv

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கோர தாக்குதல்..!!

Pirates

Pirates

Spread the love

நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ள சம்பவம் ( Pirates ) பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை கோடியக்கரை அருகே மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியதுடன் மீனவர்களின் பாடுகளையும் சேதப்படுத்தி பெரும் அட்டகாசம் செய்துள்ளனர்.

நாகப்பட்டினம் செருதூர் கிராம மீனவர்கள் பைபர் படகில் கோடியக்கரையில் இருந்து 15 நாட்டிகல் தென் கிழக்கே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென வந்த இலங்கை கடற்கொள்ளையர்களால் மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர் .

Also Read : ஐகோர்ட்டுக்கு Summer லீவ் விட்டாச்சு .. அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளையும் நியமிச்சாச்சு…!!

பின்னர் மீனவர்களிடம் இருந்த மீன்கள் வலைகள் என அனைத்தயும் சூறையாடிய கொள்ளையர்கள்கள் பைபர் படகையும் சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர் .

பின்னர் உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து காயங்களுடன் கரை திரும்பிய மீனவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரு பக்கம் இலங்கை கடற்படை மறுபக்கம் இலங்கை கடற்கொள்ளையர்கள் என தமிழக மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த பிரச்சனைக்கு தீர்வு காண ( Pirates ) வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Spread the love
Exit mobile version