Site icon ITamilTv

கோவா விமான நிலையத்தில் தமிழ் பெண்ணுக்கு நேர்ந்த சோகம் – கண்டன குரல் எழுப்பிய முதல்வர் ஸ்டாலின்..!!

Spread the love

“கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என சொன்னதும் பாதுகாப்பு படை வீரர் ஒருவரால் மிரட்டப்பட்டுள்ளார் இந்த சம்பவம் நாடு முழுவதிலும் வைரல் ஆன நிலையில் இச்சம்பவம் குறித்த செய்தி அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :

கோவா விமான நிலையத்தில் தமிழ்ப் பெண் ஒருவரிடம் இந்தியில் பேசி, அவர் இந்தி தெரியாது என்று சொன்னதும் பணியில் இருந்த பாதுகாப்பு படை வீரர் ஒருவர் அந்த பெண்ணை கடுமையான சொற்களால் மிரட்டப்பட்டுள்ளார்.

“தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது” என்றும், “இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும்” என்றும் பாதுகாப்புப் படை வீரர் பாடம் எடுத்துள்ளார். இது கடும் கண்டனத்துக்குரியது.

இந்தி அலுவல் மொழியே தவிர தேசிய மொழியல்ல என்று அவருக்கு யார் சொல்வது?

பல்வேறு மொழி பேசும் மக்களின் கூட்டாட்சி நாடு இந்தியா. கூட்டாட்சித் தன்மையை வலியுறுத்தும் வகையில்தான் மத்தியத் தொழில் பாதுகாப்புப் படை வீரர்கள் செயல்பட வேண்டும். விமான நிலையங்களில் அனைத்து மொழிகளுக்கும் உரிய மதிப்பும் மரியாதையும் வழங்கப்பட வேண்டும் என தனது ட்விட்டர் பதிவில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version