Tamilnadu

சுதந்திர தின கொண்டாட்டம்: ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

CM Stalin-independence-day-speech.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை கோட்டை கொத்தளத்தில், இந்திய தேசிய கோடியை முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து உரையாற்றிய அவர், ஒன்பது முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

முக்கிய அறிவிப்புகள்:

  1. விடுதலை போராட்ட வீரர்களுக்கு மாநில அரசு வழங்கும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.22000- ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  2. அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ12,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
  3. கட்டபொம்மன், வ.உ.சி போன்ற தியாகிகளின் வழிந்தோருக்கு வழங்கப்படும் நிதி உதவி ரூ11,000 ஆக உயர்த்தப்பட்டது.
  4. இரண்டாம் உலகப் போரில் தமிழ்நாட்டிலிருந்து பங்கேற்ற வீரர்களுக்கான மாதாந்திர நிதி உதவி ரூ15,000 உயர்த்தப்பட்டது.
  5. இரண்டாம் உலகப் போரில் மரணித்த வீரர்களின் கைம்பெண்களுக்கு ரூ 8,000 மாதாந்திர நிதி உதவி வழங்கப்படும்.
  6. மதவரம் பகுதியில் 33,000 சதுர அடி பரப்பளவில், முன்னாள் படை வீரர்களுக்காக ரூ 22 கோடி செலவில் ஒரு சிறப்பான விடுதியை உருவாக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
  7. மலைப்பகுதிகளில் ‘விடியல் பயணம்’ திட்டத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
  8. ஓட்டுநர் பயிற்சி மையங்கள் மாநில அளவில் ஒன்று, மண்டல அளவில் இரண்டு மற்றும் மாவட்ட அளவில் ஒரு பயிற்சி பள்ளி தொடங்கப்படும்.
  9. கட்டுமான தொழிலாளர் குடும்ப குழந்தைகளில் 10,000 பேர், கல்லூரி மாணவர்களாக இருக்கும்போது, ஆன்லைனில் தொழிற்திறன் பயிற்சி பெற ரூ15 கோடி நிதி ஒதுக்கீடு.

மேலும், மாநில அதிகாரங்களை மத்திய அரசு பறித்து வருவதாக குற்றம் சாட்டிய ஸ்டாலின், அதிகாரங்களை மீட்க சட்டபூர்வ முயற்சி எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *