ITamilTv

கழிவறையில் இருந்த எமன் – ஒரே குடும்பத்தில் 3 பெண்கள் பலி!

Spread the love

puducherry : புதுச்சேரியில் வீட்டு கழிவறையில் இருந்து வெளியேறிய விஷவாயு தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி மாநிலம், ரெட்டியார்பாளையம் பகுதியில் 72 வயதாகும் செந்தாமரை என்ற மூதாட்டி கழிவறைக்குச் சென்ற போது திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அவரின் சத்தம் கேட்டு அவரைக் மீட்பதற்காக சென்ற அவரது மகள் காமாட்சியும், கழிவறையில் மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தாமரையின் பேத்தி பாக்கியலட்சுமி தனது தாய் மற்றும் பாட்டியை காப்பற்ற கழிவறைக்கு சென்ற போது அவரும் மயங்கி விழுந்துள்ளார்.

இப்படி தொடர்ந்து மூன்று மயங்கி விழுந்த நிலையில், அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது செந்தாமரை மற்றும் காமாட்சி ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், மயங்கி விழுந்த இருவரும் விஷவாயுத்தாக்கி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனிடையே தீவிர் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பாக்கியலட்சுமியும் சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்தில் உயிரிழந்து உள்ளார்.

இதையும் படிங்க : திருச்சி சர்வதேச விமான நிலைய புதிய முனையம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தது!

இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்பொழுது மூன்றாக உள்ளது. விஷ வாயு தாக்கிய மேலும் இரண்டு பெண்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் அறிந்து அப்பகுதியில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் பாதாள சாக்கடை கழிவுகள் முறையாக வெளியேறாத நிலையில், அதில் அடைப்பு ஏற்பட்டு விஷவாயு உருவாகி இருக்கலாம் என்றும்,

அந்த விஷ வாயுவும் வெளியேற வழி இல்லாததால் பாதாள சாக்கடையுடன் இணைக்கப்பட்டுள்ள வீடுகளுக்குள் விஷ வாயு சென்று இந்த விபத்து ஏற்பட்டிருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் விஷவாயு கசிவு உணரப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர் (puducherry).

அப்பகுதி மக்கள் அனைவரும் முகக்கவசம் அணியவும் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version