Site icon ITamilTv

தனக்குத்தானே பிரசவம் பார்த்த பெண்… பறிபோன பிஞ்சு உயிர்.. நடுங்க வைக்கும் அதிர்ச்சி சம்பவம்!

nurse tried deliver baby

Spread the love

nurse tried deliver baby : கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயதாகும் வினிஷா என்ற பெண் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இவர் சென்னை தி நகர் சவுத்போக் ரோட்டில் தங்கி இருந்து கடந்த ஒரு வருடமாக டாக்டர் நாயர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், செவிலியர் வினிஷாவிற்கு சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த 29 வயதாகும் செல்வமணி என்ற நபருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஏற்காடு பேருந்து விபத்து : உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கிடுக – ஈபிஎஸ்!

இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்த பழக்கத்தினால் கருவுற்ற வினிஷா 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.

இந்த சூழலில் திடீரென அவருக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வினிஷா ஒரு செவிலியர் என்பதால் தனக்குத்தானே பிரசவம் பார்க்க முடிவு செய்து, குளியலறைக்கு சென்று அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னரே தானாக பிரசவம் பார்ப்பது சுலபமல்ல என்பதை புரிந்து கொண்டு முடிவெடுப்பதற்குள் அவரது பிரசவம் விபரீதத்தில் முடிந்தது.

அந்த முயற்சியின் போது வயிற்றில் இருக்கும் சிசுவை வெளியே எடுக்க முயற்சித்து சிசுவின் கால்களை பிடித்து இழுத்துள்ளார்.

இந்த முயற்சியில் பச்சிளம் சிசுவின் கால்கள் தனியாக பிரித்துக் கொண்டு வெளியே வந்துள்ளது. அதன் பின்னர் குழந்தையும் இறந்த நிலையில் பிறந்துள்ளது.

இதனால், குழந்தையின் கால்களை கழிவறையில் வீசிவிட்டு, குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றுள்ளார் nurse tried deliver baby.

அங்கு வினிஷாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை இறந்து பிறந்து இருப்பதை உறுதி செய்தனர். குழந்தையின் சடலத்தை பத்திரப்படுத்திய மருத்துவர்கள், வினிஷாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாம்பலம் காவல்துறையினர் செவிலியர் வினிஷா மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தனக்குத்தானே பிரசவம் பார்க்க முயன்ற செவிலியர், குழந்தையின் கால்களை பிடித்து இழுத்து பச்சிளம் சிசுவை இறந்த நிலையில் பெற்றெடுத்த சம்பவம் மருத்துவர்கள் உட்பட பல தரப்பினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஏற்காடு 11வது கொண்டை ஊசி பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து.. 6 பேர் பலி!


Spread the love
Exit mobile version