Site icon ITamilTv

விஜயகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் – அன்புமணி ராமதாஸ்!!

Spread the love

தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் உடல் நலம் பெற்று மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

‘உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழக்கமான மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னதாக விஜயகாந்துக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீராக இல்லை. விஜயகாந்திற்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. இன்னும் அவருக்கு 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்றும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விஜயகாந்த் உடல் நிலை குறித்து அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர் பிரிதிவி மோகன்தாஸ் வெளியிட்ட அறிக்கையில்.. “திரு விஜயகாந்த் அவர்களின் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version