Site icon ITamilTv

“தமிழ்நாட்டை வஞ்சிக்காதே!” – திமுக & கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!

தமிழ்நாட்டை வஞ்சிக்காதே

தமிழ்நாட்டை வஞ்சிக்காதே

Spread the love

தமிழ்நாட்டை வஞ்சிக்காதே :

சிந்தாமணி அருகில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில உரிமைகள் மீதான தாக்குதல்,

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதி பகிர்வில் வஞ்சிப்பது, இடி, ஐ. டி போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது,

அத்துமீறும் ஆளுநரையும், அடாவடி செய்யும் மோடி அரசையும் கண்டித்து கோஷமிட்டனர் (தமிழ்நாட்டை வஞ்சிக்காதே).

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர்கள், புல்லட் லாரன்ஸ்,

கனியமுதன், மாநில நிர்வாகி அஷ்ரப்அலி, மாசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர், வைரமணி, மாநகர செயலாளர் மதிவாணன், இந்திய ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

இதையும் படிங்க : Seeman Consolation : சைதை துரைசாமி அவர்களின் அன்புமகன் வெற்றி விரைவில் நலமுடன் திரும்புவார் – சீமான் ஆறுதல்!

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி

தமிழகத்தில் திமுக 35 இடங்களில் வெல்லும் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெறும் என ஒரு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது என்ற கேள்விக்கு..

ஒரு சிறு திருத்தம் 35 சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பெட்டியை திறந்து பார்த்தால் 40 இருக்கும் இந்தியா முழுவதும் 400 இருக்கும்.

கூட்டணி யூகங்கள் எல்லாம் தாண்டி இருக்கும் ஏனென்றால் மக்களுடைய வேதனை அந்த அளவுக்கு இருக்கிறது.

தென்னாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கிறது. ஏனென்றால் மணிப்பூருக்கே போகாத ஒரு பிரதமரை பெற்று இருக்கிறோம் என மக்கள் எல்லாம் முடிவு செய்து இருக்கிறார்கள்.

எங்கள் பக்கம் வரமுடியாத தேர்தலே நடத்த முடியாத பிரதமர் இருக்கிறார் என காஷ்மீர் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க : பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக சென்னை காவல்துறை கூடுதல் ஆணையர் செய்தியாளர்கள் சந்திப்பு!

தென்னாடு பக்கம் வரவே முடியாது என்னால் வந்து ஷோ காட்டலாம். அண்ணாமலை வழி அனுப்பும் விழாவாக இருக்கும் அவ்வளவுதான்.

கருத்து கணிப்பை தாண்டி தேர்தலில் இந்தியா முழுவதும் வென்று ஆட்சி அமைக்கும். ஊடகங்கள் மாற்றிச் சொன்னாலும் இது நடைமுறையில் இருக்கும் கருத்துக் கணிப்பை தாண்டி மக்கள் கணிப்பை பார்க்க வேண்டும்.

முருகன் தமிழ்நாட்டு அமைச்சராக இருந்தார். கோடான கோடி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு ரூபாய் கூட பெற்று கொடுக்கவில்லை என தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version