Tamilnadu

“ஒரே குடும்பத்திற்கு இருமுறை வாய்ப்பு போதும்” – சுந்தர் சி தாக்கு

மதுரை மத்திய தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சுந்தர் சி, எதிரணி மீது கடுமையாக விமர்சனம் செய்தார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்ந்து இரண்டு முறை வாய்ப்பு வழங்கியது போதும்” என்று அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் பேசுகையில், “தொகுதியில் கழிப்பிடங்கள், சமுதாய கூடங்கள், ரேஷன் கடைகள் அமைத்ததை பெரிய சாதனையாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு அமைச்சராக இருந்தவர் இன்னும் பல முக்கியமான திட்டங்களை கொண்டு வரக்கூடியவர்தான். ஆனால் அவை எதுவும் நடக்கவில்லை” என்றார்.

மதுரை மாநகராட்சி சொத்துவரி முறைகேடு உள்ளிட்ட பல விவகாரங்களில் பதில் அளிக்காமல், தனிப்பட்ட தாக்குதல்களில் ஈடுபடுகிறார் என்றும் குற்றம்சாட்டினார்.

“என்னை பற்றி விமர்சிப்பதற்கு பதிலாக மக்களுக்கு தேவையான விளக்கங்களை வழங்க வேண்டும்” என்று கூறினார்.

படிப்பு குறித்து பேசுபவர்களை குறிப்பிட்டு, “ஒருவரின் கல்வி மட்டுமே அவரின் திறனை நிர்ணயிக்காது.

செயல்பாடுகளே முக்கியம்” என்றார். மேலும், “மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்க முடியாது” என்றும் வலியுறுத்தினார்.

இறுதியாக, “மதுரையில் மாற்றம் வேண்டிய நேரம் வந்துவிட்டது. மக்கள் புதிய வாய்ப்பை யோசிக்க வேண்டும்” என்று சுந்தர் சி தனது உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *