தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சி.ஆர் அவர்களின் மகள் கவிதா புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
தந்தையின் கட்சியில் இருந்து விலகிய அவர், தனது தனி அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
குடும்பத்துக்குள்ளேயே ஏற்பட்ட அரசியல் கருத்து வேறுபாடுகள் காரணமாக இந்த பிரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை உருவாக்கி மாநில அரசியலில் முக்கிய பங்கு வகித்தவர் கே.சி.ஆர். அவரது மகள் கவிதா, மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
டெல்லி மதுபான வழக்கு உள்ளிட்ட சில சர்ச்சைகளுக்குப் பிறகு, தந்தை மற்றும் சகோதரர் தன்னை புறக்கணித்ததாக அவர் குற்றம் சாட்டினார்.
இதையடுத்து குடும்பத்தில் கருத்து வேறுபாடு அதிகரித்து, கட்சியில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.
பின்னர் ஹைதராபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், தனது புதிய கட்சியை அறிவித்துள்ளார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது போல அரசியலில் குடும்ப உறவுகள் பிரிந்து போவது புதிதல்ல. பல மாநிலங்களில் குடும்ப அரசியல் சண்டைகள் ஏற்கனவே நடந்துள்ளன.
சிலர் எதிர் கட்சிகளில் இணைந்து போட்டியிட்ட சம்பவங்களும் உள்ளன. அரசியலில் அதிகாரம் வந்தால் உறவுகள் கூட பிரிந்து விடும் என்ற நிலை மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
