ITamilTv

குடியரசு தலைவருடன் அமித்ஷா திடீர் சந்திப்பு!! பாஜகவின் அடுத்த பிளான்?

Spread the love

மணிப்பூர்(manipur) விவகாரம் தொடர்பாக, இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் சந்திக்க இருந்த நிலையில் மத்திய அமைச்சர் அமித்ஷா (amit shah)குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் நிலை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தியா கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்கள் கொண்ட குழு மணிப்பூரில் நேரில் ஆய்வு செய்தது. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்தித்தும் இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

இதனைதொடர்ந்து மணிப்பூர் வன்முறை தொடர்பாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இந்தியா கூட்டணி கட்சியினர், இன்று காலை 11 மணிக்கு சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா(amit shah) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்துப் பேசினார். அப்போது மணிப்பூர் விவகாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.


Spread the love
Exit mobile version