Site icon ITamilTv

வட்டச்செயலாளர் பதிவிக்கு கூட தகுதி இல்லாத நபர் தான் அண்ணாமலை – செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

selvaperunthagai speech about annamalai

selvaperunthagai speech about annamalai

Spread the love

சென்னை இராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கூறியதாவது :

ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ் ராஜசேகர் ரெட்டி சிலை எரிப்புக்கு தமிழக காங்கிரஸ் கட்சி எதிர்ப்பை பதிவு செய்கிறது.

தமிழ்நாட்டு மக்களால் புறக்கணிக்கப்பட்ட பின் வெறுப்பு அரசியலை துப்பி வருகிறது ஒரு தேசிய கட்சி. முதலமைச்சரை அவதூறாக பேசுவதும் அரசியல் கட்சியை பழிவாங்கும் எண்ணத்தோடும் அவர் செயல்படுகிறார்.

தமிழ்நாட்டில் எத்தனையோ அரசியல் கட்சிகள் உள்ளது. யாராவது வெறுப்பு அரசியல் செய்கிறார்களா? அவதூறுகள் பேசுகிறார்களா? ஆரோக்கியமான விவாதங்கள் செய்கிறார்கள். ஆனால் ஒரு கட்சி மட்டும் வெறுப்பு அரசியலையும் விவாதங்களையும் சகதி போல் இறைத்து வருகிறார்கள்.

திமிருக்கும் ஆணவத்திற்கும் இறுமாப்பிற்கும் மிகப்பெரிய கடிவாளத்தை போட்டு வைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டிற்குள் நுழைய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்ட போதும் அநாகரிக அரசியல் செய்வதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Also Read : மொபைல் சேவையை மாற்றும் காலக்கெடுவில் புதிய மாற்றம்..!!

இந்திரா காந்தி பற்றியும் தமிழ்நாட்டு காங்கிரஸ் பற்றியும் தமிழக காங்கிரஸ் தலைவருக்கு தெரியாது என்று சொல்கிறார். அனைத்து அரசியலையும் படித்துவிட்டு தான் வந்துள்ளோம். நான் வாதம் செய்ய தயாராக உள்ளேன். உண்மையில் அண்ணாமலைக்கு தைரியம் இருந்தால் நான் காங்கிரஸ் பற்றி பேசுகிறேன் அவர் இந்து மகாசபை தெரிந்து பாஜக பற்றி பேச தயாராக உள்ளாரா.? எனவும் ஆருத்ரா கோல்ட் பற்றி நாங்கள் பேசமாட்டோம்.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் கட்சி நடத்துகிறார்கள் அதைப் பற்றி பேச மாட்டோம் ஆளுநராக இருந்த போதும் இல்லாத போதும் அந்த வீட்டிற்கு செல்ல மாட்டேன் என்று இழிவு செய்கிறார்கள் அதைப்பற்றி பேச மாட்டோம் நாங்கள் ஜனநாயகமாக பேசுவோம் என கூறினார்.

முதலில் அண்ணாமலை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் துரோகம் செய்வதை நிறுத்த வேண்டும். அவர் இன்னும் கண்ணடிகா மனநிலையில் உள்ளார். தமிழ் விரோத போக்குடன் உள்ளார்.நான் ஒரு தமிழனாக இருந்தாலும் காவிரி பிரச்சினையில் கன்னட மக்களுக்கு தான் உதவி செய்வேன் என்கிறார்.

நான் ஆதாரத்தை வெளியிட்டால் அரசியல் பொதுவாழ்வில் இருந்து வெளியேறிக்கொள்வாரா? சிருங்கேரி மடத்தில் யார் தவம் இருந்தார் யார் உங்களை உருவாக்கினார் என்றெல்லாம் பேச வேண்டியிருக்கும். அவர் மகாத்மா காந்தி அம்பேத்கர் யார் பற்றியும் படிக்கவில்லை. அடிமை என்ற வார்த்தை எஜமான் இடம் தான் வரும் என தெரிவித்தார்.

எந்த அடிப்படையில் அவரை மாநில தலைவராக்கினார்கள் ஒரு வட்ட செயலாளராக கூட அவருக்கு தகுதி இல்லை. நான் திமுகவில் இருந்து வந்தேனா அதிமுகவிலிருந்து வந்தேனா ஆண்டாண்டு காலமாக விடுதலைக்கு போராடிவரும் விளிம்பு நிலைக்கு உழைத்து வரும் தலித் இயக்கத்தில் பணியாற்றிய உண்மை கூட தெரியவில்லை.

கஷ்டப்பட்டு அரசியல் அங்கீகாரம் பெற்றுள்ளது ஒரு தலித் அரசியல். அவர்கள் கட்சி சார்ந்த கல்யாணராமன் தமிழுசைக்கு பதில் சொல்ல சொல்லுங்கள். அருவருப்பான அகங்கார ஆணவ அரசியல் பேசினால் அண்ணாமலைக்கு தினமும் பதிலடி கொடுப்போம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை படிப்புக்கு லண்டன் செல்ல இருப்பது குறித்த கேள்விக்கு :

அமெரிக்க அதிபராக முயற்சிக்கும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்கள்.

தமிழக மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம், அறிவுரை வழங்குகிறோம்.

விவாதிக்க தயாராக இருக்கும் நாங்கள் அரசியல் என்றால் என்ன?, பண்பு, இனிமை என்றால் என்ன என்று அண்ணாமலைக்கு சொல்லித் தருகிறோம்.

வெறுப்பு அரசியல் கான நடைபயணம் அல்ல தமிழ்நாட்டு கட்டமைப்பை அதிகப்படுத்த, வெறுப்பு அரசியலை அகற்ற, தமிழக மக்களுடன் கலந்துரையாட நடைபயணம் மேற்கொள்ள உள்ளோம். நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் அதற்கு தயாராக உள்ளோம். வீட்டிற்கு போகவும் சரி சிறைக்குப் போகவும் சரி எல்லாவற்றிற்கும் தயாரக உள்ளோம்.

எங்கள் தலைவர்கள் யாரும் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தவர்கள் இல்லை பிரிட்டிஷ்காரன் காலில் விழுந்தவர்கள் இல்லை. நேற்று முளைத்த காளான் இல்லை.

அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று அந்தந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர்கள் நடைபயணம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் புது டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்து நடைப்பயணம் தொடர்ந்து நடக்கும். ராஜீவ் காந்தி நினைவிடத்தில் இருந்து தொடங்க வாய்ப்பு உள்ளது விரைவில் முழு தகவலை தெரிவிப்போம் என கூறினார்.

புதிய சட்டங்கள் கொண்டு வந்திருப்பதை காங்கிரஸ் கண்டிக்கிறது. புதிய விவசாய சட்டங்களை கொண்டு வந்து அவசரகதியில் நிறைவேற்றி திரும்ப பெற்றார்களோ அதை போல் இதையும், யாரிடமும் கலந்துரையாடாமல் கொண்டு வந்துள்ளார்கள் என தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version