திமுக நாடாளுமன்ற குழு நிர்வாகிகளை நியமித்து ( DMK Parliamentary Committee Executives ) திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
மக்களவை – மாநிலங்களவை இரண்டு அவைகளுக்கும் சேர்த்து திமுக நாடாளுமன்றத்தின் குழுத் தலைவராக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்களும்; மக்களைவைக் குழுத் தலைவராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி அவர்களும், மக்களைவைக் குழுத் துணைத் தலைவராக திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர் தயாநிதி மாறன், எம்.பி அவர்களும், மக்களைவை கொறடாவாக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, எம்.பி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Also Read : பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க மீண்டும் ஒரு வாய்ப்பு..!!
மாநிலங்களவைக்குழுத் தலைவராக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா, எம்.பி., அவர்களும் மாநிலங்களவைக் குழுத் துணைத் தலைவராக தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர் மு.சண்முகம், எம்.பி., அவர்களும் மாநிலங்களவை கொறடாவாக தலைமைக் கழக சட்ட தலைமை ஆலோசகர் வழக்கறிஞர் பி.வில்சன், எம்.பி., அவர்களும் இரு அவைகளின் பொருளாளராக கொள்கைப் பரப்பு செயலாளர் எஸ்.ஜெகத்ரட்சகன், எம்.பி அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மத்தியில் ஏற்கனவே முக்கிய பொறுப்பில் இருந்த தலைவர்களுக்கு மீண்டும் பல கூடுதல் ( DMK Parliamentary Committee Executives ) பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.