ITamilTv

பெண் வீரர்களின் குரலை மத்திய அரசு புறக்கணிக்கிறது – தமிழச்சி தங்கப்பாண்டியன் ஆவேசம்

Spread the love

பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது மனதிற்கு வருத்தமளிப்பதாக தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி கூறியதாவது :

பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்சய் சிங் மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாக்ஷி மாலிக் மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது மனதிற்கு மிகுந்த வருத்தத்தை கொடுக்கிறது .

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு, சமமான ஊதியம் வழங்குதல் தொடர்பாக பெண் விளையாட்டு வீரர்களின் குரல்களை நாம் ஒட்டு மொத்தமாக புறக்கணித்து பரிசீலனை செய்ய மறுக்கிறோம்

இந்திய மல்யுத்த சம்மேளன தேர்தலில் நியாயமான நியமனத்தையும், வெளிப்படையான செயல்முறையையும் உறுதி செய்யாத மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறேன் என தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version