Site icon ITamilTv

CM in Spain : ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு

CM in Spain

CM in Spain

Spread the love

தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்க 8 நாட்கள் அரசு முறைப் பயணமாக CM in Spain ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று பங்கேற்கிறார்.

தமிழ்நாட்டிற்கு 1 டிரில்லியன் பொருளாதார இலக்கை எட்டிவிடும் முயற்சிகளில், 2024-ஆம் ஆண்டு தொடக்கமே உலக முதலீட்டாளர்கள் மாநாடு வெற்றியாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு மேலும் பல முதலீடை ஈர்ப்பதற்கு கடந்த 27 ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டிற்கு பறந்து சென்றார்.

8 நாட்கள் ஸ்பெயினில் இருக்கும் முதல்வர் சொன்னது சொன்னபடி பல தொழில் முதலீடுகளை ஈர்த்து பிப்ரவரி 7-ஆம் தேதி காலை சென்னை திரும்புகிறார் .

முதல்வரின் கடந்தகால வெளிநாட்டுப் பயணங்களைப் பொறுத்தவரை, கடந்த 2022-ஆம் ஆண்டு, தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, ஐக்கிய அரபு நாடுகள் சென்றிருந்தார் .

அந்தப் பயணத்தில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

அதேபோல, 2023-ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றதில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆயிரத்து 342 கோடி ரூபாய் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு வேகமாக செயல்வடிவம் கொடுத்ததால் பல நிறுவனங்கள், தங்களின் தொழிற்சாலைகளை தமிழ்நாட்டில் நிறுவத் தொடங்கியிருக்கிறார்கள்.

எடுத்துக்காட்டாக, ஜப்பான் நாட்டை சேர்ந்த ஓம்ரான் மற்றும் மிட்சுபிஷி போன்ற நிறுவனங்கள். தங்களின் தொழிற்சாலைகளை நிறுவ தொடங்கிவிட்டார்கள்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட இரண்டே மாதங்களில், ஓம்ரான் நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதேபோன்று, சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த கேப்பிடாலேண்டு நிறுவனத்தின் ஐ.டி. பூங்கா-வை சமீபத்தில் தொடங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த முன்னணி முதலீட்டாளர்கள், வணிக அமைப்புகள், தொழில் முனைவோர் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

இந்த மாநாட்டில், தமிழ்நாட்டில் நிலவும் சாதகமான முதலீட்டுச் சூழல் பற்றியும், தமிழ்நாட்டின் கட்டமைப்பு வசதிகள், மனிதவள ஆற்றல் போன்றவற்றின் சிறப்பம்சங்களையும் எடுத்துக்கூறி.

Also Read : https://itamiltv.com/another-alcohol-murder-in-natham/

இந்தியாவில் முதலீடுகளை மேற்கொள்ள தமிழ்நாடுதான் உகந்த மாநிலம் என்று, அந்த நாட்டு முதலீட்டாளர்களுக்கு எடுத்துரைக்க என முதல்வர் ஸ்டாலின் சென்றிருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று CM in Spain நடைபெறும் மாநாட்டில் பல்வேறு முதலீட்டாளர்களை சந்திக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார்.


Spread the love
Exit mobile version