Site icon ITamilTv

பட்டப்பகலில் நடந்த தீபக் ராஜா கொலை – 5 பேர் கைது..!!

Deepak Raja

Deepak Raja

Spread the love

நெல்லையில் பட்டப்பகலில் காதலி கண்முன்னே பிரபல ரவுடி தீபக் ராஜா வெட்டிக்கொலை செய்யப்பட்ட ( Deepak Raja ) வழக்கில் 5 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகை குளத்தை சேர்ந்த பிரபல ரவுடி தீபக் ராஜா 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

பட்டப்பகலில் உணவகம் ஒன்றின் வெளியில் மக்கள் கூட்டம் இருந்த நேரத்தில் தீபக் ராஜாவை சரமாரியாக அந்த மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது .

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தீபக் ராஜாவின் உடல் கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்தனர் .

Also Read : பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம் – அமெரிக்காவில் நடந்த வினோத நிகழ்வு..!!

இந்நிலையில் இந்த வழக்கில் 5 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரகசிய இடத்தில் வைத்து 5 பேரிடமும் தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வரும் நிலையில் இந்த கொலை வழக்கில் மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படுகொலை செய்யப்பட்ட ரவுடி தீபக் ராஜா மீது, நெல்லை, தூத்துக்குடி, சிவகங்கை, தஞ்சாவூர் உள்ளிட்ட ( Deepak Raja ) பல்வேறு மாவட்டங்களில் 23 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version