ITamilTv

“உலக அமைதி நாளான இன்று எங்கும் எதிலும் அமைதி நிலவ வழி வகுப்போம்” – ஜி.கே.மணி

Spread the love

செப்டம்பர் – 21 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் உலக அமைதி நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது .இந்நாளில் எங்கும் எதிலும் அமைதி நிலவ வழி வகுப்போம் அதற்காக உறுதி ஏற்போம் என பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் கூறிருப்பதாவது :

ஐ. நா. சபையின் வழிகாட்டுதலோடு உலக நாடுகளில் உலக அமைதி நாள் கடை பிடிக்கப்பட்டு வருகிறது. நாடுகளிடையே பகைமை, போட்டி, ஆக்கிரமிப்பு, சுரண்டல் போன்ற சுயநல போக்கை தவிர்த்து அன்பு பாராட்டுதல், நட்புடன் நேசித்தல், மற்றவற்றின் இறையாண்மையை மதித்தல், நல்லிணக்க மனித நேய உணர்வுடன் ஈடுபாடு கொண்டால் உலகில் அமைதி மேம்படும். இதற்கு இந்திய நாட்டின் பஞ்சசீலக் கொள்கை வழிகாட்டுகிறது.

உலக அமைதி என்பதோடு ஒவ்வொரு தனி மதனிதனும் தனது வாழ்வில் போட்டி, பொறாமை, ஏமாற்றுதல், சுரண்டல், துன்புறுத்துதல், இழிவாக நடத்துதல், சுய நலம் போன்ற தீயவற்றை போக்கி மற்றவர்களிடம் அன்பு, மரியாதை, நேசித்தல், உதவுதல், சேவை, மனித நேய சகோதர நல்லுறவு வளர்த்தல் போன்ற உயரிய பண்புகளை மேற்கொண்டால் தனி மனித வாழ்வில் அமைதி பொங்கும். வன்முறை , அராஜகம் அறவே அற்றுப் போய்விடும்.

எங்கும் எதிலும் அமைதி நிலவ வழி வகுப்போம் ! உறுதி ஏற்போம்! என ஜி.கே.மணி வெளியிட்டுள்ள செய்துகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version