Site icon ITamilTv

குர்குரே வாங்க மறந்த கணவர் – கடுப்பில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய மனைவி..!!

kurkure

kurkure

Spread the love

உத்தரபிரதேச மாநிலத்தில் கணவர் குர்குரே தின்பண்டத்தை வாங்க மறந்ததால் மனைவி விவாகரத்து ( kurkure ) நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

உத்தரபிரதேச மாநிலத்தில் நொறுக்கு தீனியை தினம்தோறும் வயிறார உண்டு வந்த பெண் ஒருவர் தனது கணவரை தினமும் குர்குரே தின்பண்டத்தை வாங்கி வர சொல்லி உண்டு வந்துள்ளார் .

ஒருநாள் கணவர் அந்த தின்பண்டத்தை வாங்கி தர மறந்த நிலையில், கோபமடைந்த மனைவி, வீட்டை விட்டு வெளியேறி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார்.

Also Read : பயம் வேண்டாம் – புரொஃபைல் படங்கள் பாதுகாப்பாக இருக்க புதிய அப்டேட் கொடுத்த வாட்ஸ் ஆப்..!!

சரி சின்ன கோபம் தான் மீண்டும் மனைவி வீட்டிற்கு வந்துவிடுவார் என்று ஆசையில் காத்திருந்த கணவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது . நாட்கள் மெதுவாக செல்ல ஒரு நாள் மனைவி விவாகரத்து கோரி தனது கணவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த ஜோடிக்கு கடந்த ஆண்டு தான் திருமணம் நடைபெற்ற நிலையில் 5 ருபாய் மதிப்புள்ள ( kurkure ) தின்பண்டம் வாங்கி தர மறந்ததால் மனைவி விவாகரத்து கேட்டுள்ள சம்பவம் கணவர் வீட்டாரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .


Spread the love
Exit mobile version