Site icon ITamilTv

உயர்கல்விக்கு வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு’ நிகழ்ச்சி இன்று முதல் தொடக்கம்..!!

Kallurikanavu

Kallurikanavu

Spread the love

தமிழகத்தில் +2 முடித்த மாணவர்களுக்காக உயர்கல்வி குறித்து வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு’ நிகழ்ச்சி இன்று ( Kallurikanavu ) முதல் தொடங்கியுள்ளது .

தமிழ்நாட்டில் 7,60,606 மாணவ, மாணவிகள் எழுதிய பிளஸ் 2 பொதுத்தேர்வில் 7,19,196 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் மாணவர்களின் உயர்கல்விக்கு உதவும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .

அந்தவகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் உயர்கல்வி குறித்து வழிகாட்டும் ‘கல்லூரிக்கனவு’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது .

Also Read : ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்திய விவகாரம் – 4 பேரை கைது செய்தது சி.பி.ஐ..!!

உயர்கல்வி படிப்புகள், கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது?, மேற்படிப்பை முடித்தவுடன் கிடைக்கக்கூடிய வேலைவாய்ப்புகள் பற்றிய விவரங்கள் மாணவ-மாணவிகளுக்கு இந்நிகழ்ச்சியின் மூலம் தெரிவிக்கப்பட உள்ளன .

கல்லூரிக்கனவு நிகழ்ச்சி நடைபெறும் இடங்கள் :

மே 8: சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், நாகபட்டினம், மதுரை, திருநெல்வேலி, சேலம்

மே 9: திருவள்ளூர், நீலகிரி, பெரம்பலூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், தருமபுரி

மே 10: செங்கல்பட்டு, திருப்பூர், அரியலூர், கடலூர், தேனி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி

மே 11: காஞ்சிபுரம், ஈரோடு, தஞ்சாவூர், விழுப்புரம், விருதுநகர், தூத்துக்குடி, திருபத்தூர்

மே 12: ராணிபேட்டை, தென்காசி, நாமக்கல், கரூர், திருவாரூர், புதுக்கோட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், திருவண்ணாமலை, வேலூர்

இதில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான கல்லூரி கனவு 2024 நிகழ்ச்சி இன்று நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் +2 படித்த மாணவ மாணவிகள் கலந்து கொள்ள உள்ளனர் . மாணவ மாணவியர்கள் தங்களின் உயர்கல்விக்கான பாடப்பிரிவு , பட்டப்படிப்புகள், ( Kallurikanavu ) பட்டய படிப்புகள் மற்றும் கல்லூரிகளை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்பது பற்றி இந்நிகழ்ச்சியில் விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட உள்ளது.


Spread the love
Exit mobile version