தமிழ்நாடு மற்றும் கேரளாவில் இருந்து ரஷ்யாவிற்கு இளைஞர்களை ஏமாற்றி கடத்திவந்த கும்பலை ( CBI ) சேர்ந்த 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சமூக வலைதளம் மூலம் விளம்பரம் செய்து பல ஆசை வார்த்தைகள் கூறி ரஷ்யாவிற்கு இளைஞர்களை கடத்தி வந்ததாக கூறி சில வீடியோக்கள் இணையத்தில் செம வைரலாக பரவி வந்தது.
இதேபோல் ரஷியாவில் இருந்து சில இளைஞர்கள் உக்ரைன் நாட்டிற்கு எதிராக தங்களை போரிட சொல்வதாக கண்ணீர் விட்டு பேசிருக்கும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி இருந்தது .
Also Read : சுனிதா வில்லியம்ஸ் மேற்கொள்ள இருந்த 3வது விண்வெளி பயணம் ஒத்திவைப்பு..!!
இந்நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ கைக்கு மாற இளைஞர்களை ரசியாவிற்கு அனுப்பிய கும்பலை தேடி வந்தனர்.
இதையடுத்து கன்னியாகுமரியை சேர்ந்த நிஜில் ஜோபி பென்சாம், மும்பையை சேர்ந்த அந்தோனி மைக்கேல், கேரளாவை சேர்ந்த அருண், யேசுதாஸ் ஆகிய 4 பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டை சேர்ந்த நிஜில் ஜோபி, ரஷ்யாவில் இருந்தபடி கடத்தல் கும்பலின் மூளையாக செயல்பட்டதாகவும் கடத்தப்பட்ட இளைஞர்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த மார்ச் மாதம் இந்த வழக்கு தொடர்பாக சி.பி.ஐ. சென்னை உட்பட 7 நகரங்களில் சோதனை ( CBI ) நடத்தியது குறிப்பிடத்தக்கது.