ITamilTv

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்..!” ஆளுநர் ஆர்.என்.ரவி மகளிர் தின வாழ்த்து

governor ravi

Spread the love

governor ravi -ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் சர்வட்ஹேச மகளிர் தினமானது, இவ்வாண்டு “நிகழ் காலத்தில் சமத்துவம்: டிஜிட்டல் எதிர்காலத்தை உருவாக்குதல்” என்ற கருப்பொருளுடன் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

அதை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பெண்கள் முன்னேற்றம், மகளிரின் நலனுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள், வகுக்கப்பட வேண்டிய கொள்கைகள் குறித்து வாழ்த்துக்கள், ஆலோசனைகள், கருத்தரங்கங்கள் என நாடே களைகட்டி வருகிறது.

தமிழகத்திலும் அது போன்ற நிகழ்வுகள் நேற்று முதலே துவங்கியிருக்கும் நிலையில், சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அங்குள்ள அவ்வையார் சிலைக்கு மாலை அணிவித்தும், அதன் அருகில் வைக்கப்பட்டிருந்த திருஉருவ படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார் தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி.

மாற்றங்களை கொண்டு வந்த பிரதமர்:

அதை தொடர்ந்து செய்தியாளர்கள், சமூக ஆர்வலர்கள், மகளிர் அமைப்பு பிரதி நிதிகள் மற்றும் ஆளு நர் மாளிகை ஊழியர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றிய ஆளுநர், “அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கான பல்வேறு அடிப்படை மாற்றங்களை கொண்டு வந்துள்ளார்.

மகளிர் மேம்பாட்டு திட்டங்கள்:

குறிப்பாக மகளிர் மேம்பாட்டு திட்டங்கள், பெண்களை முன்னிறுத்தும் வளர்ச்சிகள், பெண்கள் நிர்வாகம் ஆகியவற்றில் முயற்சிகளை மேற்கொண்டு உள்ளார். பல பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பான கழிப்பறை கட்டுவது, பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் கழிப்பறைகள் வசதிகள் செய்து கொடுப்பது ஆகிய திட்டங்களால் மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க அளவிற்கு மாணவிகளின் சேர்க்கை உயர்ந்துள்ளது. பல இடங்களில் மாணவர்களைவிட மாணவிகள்தான் ஆராய்ச்சி படிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பெண்களின் சுகாதாரத்திற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது தாய்மார்கள் பிறந்த குழந்தைகள் உட்பட அனைவரும் நலமாக உள்ளனர்.

ஆண்களுக்கு நிகராக பெண்கள்:

அதேபோல், நிதி ஆதாரங்களை பொறுத்தவரையில் 50 கோடி அளவிற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வங்கி கணக்குகளில் பெண்களும் அதிகமாக உள்ளனர். முத்ரா கடன் எடுத்து தொழில் தொடங்கிய பெண்கள் 40 கோடி பேர் உள்ளனர். அவர்கள் 23 லட்சம் கோடி கடனாக பெற்று உள்ளனர்.

பெண்கள் தங்கள் வாழ்நாளில் ஒவ்வொரு அம்சங்களிலும் ஆண்களுக்கு சமமாக பங்களித்து வருகிறார்கள். பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால், சட்டங்களை உருவாக்குவதிலும் பெண்களின் பங்கு அதிகரித்துள்ளது.

பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்:

2047-ம் ஆண்டுக்குள் நமது தேசம் தன்னிறைவு பெற்றுள்ள நாடாக திகழ வேண்டும் என்பது நமது நோக்கம். இந்த தேசிய கனவு பெண்களின் சரி பாதி பங்களிப்புடன் நிறைவேற்றப்படும்.

அனைவரையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளர்ச்சியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்து ‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்’ பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என சிறப்புரை ஆற்றி தனது மகளிர் தின வாழ்த்துக்களை தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிவித்தார் ஆளுநர் (governor ravi) ஆர்.என்.ரவி.


Spread the love
Exit mobile version