ITamilTv

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பது உண்மைதான் – பதில் அறிக்கை விட்ட நாராயணன் திருப்பதி

Spread the love

மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக சி.ஏ.ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார் .

இந்நிலையில் தமிழக முதல்வர் சி.ஏ.ஜி அறிக்கையில் கூறிருப்பத்து உண்மை தான் என தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

ஆயுஷ்மான் பாரத் திட்டத்திலும் முறைகேடுகள் அரங்கேறி உள்ளது என்று சி.ஏ.ஜி அறிக்கை குறிப்பிட்டுள்ளது என்று கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின். ஆமாம். குறிப்பிட்டுள்ளது உண்மை தான். ஆனால், அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள்/முறைகேடுகள் அனைத்தும் மாநில அரசுகளை நோக்கி தான் சொல்லப்பட்டுள்ளன என்பதை நீங்கள் சொல்ல தவறி விட்டீர்களே முதல்வர் அவர்களே?

தமிழகத்தில் இந்த திட்டத்தில் பின் வரும் குறைகள் அல்லது ‘உங்கள் மொழியில்’ முறைகேடுகள் குறித்தும் சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இது போன்ற பல்வேறு முறைகேடுகள் அல்லது குறைபாடுகளை அனைத்து மாநிலங்களிலும் சுட்டி காட்டியுள்ளது சி ஏ ஜி அறிக்கை. சுமார் 12 கோடி ஏழை குடும்பங்களுக்கு சுகாதார காப்பீடு என்பது சாதாரண விஷயமல்ல.

உலகத்திலேயே, சுகாதார காப்பீட்டில் இந்தியாவின் இந்த திட்டம் தான் சிறந்தது என்பதை புரிந்து கொண்டு, இதே அறிக்கையில் (பக்கம் எண். 88,89) மாநில அரசுகளுக்கு, மாநில சுகாதார ஆணையங்களுக்கு அளித்துள்ள பரிந்துரைகளை பின்பற்ற அரசு அதிகாரிகள் மற்றும் சுகாதார துறைக்கு உத்தரவிடுவீர்களா முதல்வர் அவர்களே?

இனியாவது ‘ஆயுஷ்மான் பாரத்’ என்ற இந்த காப்பீடு திட்டத்தில் உள்ள குறைபாடுகளை மத்திய பாஜக அரசின் முறைகேடுகள் என்று கூறாமல் நீங்கள் சுட்டிக் காட்டிய சி ஏ ஜி அறிக்கையினை முழுமையாக படித்து, அதன் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, சரி செய்து இனி எந்த முறைகேடுகளோ, குறைபாடுகளோ இல்லாத திட்டத்தை செயல்படுத்தும் முன்மாதிரி மாநிலமாக தமிழகம் அமைய உத்தரவிடுவீர்களா முதல்வரே? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.


Spread the love
Exit mobile version