ITamilTv

அடுத்தடுத்த வீடுகளில் கைவரிசை – களவு போன 40சவரன் நகை, ரூ.6லட்சம் ரொக்கம்

theft

Spread the love

திருச்சி, மண்ணச்சநல்லூர் பகுதியில் அடுத்தடுத்த வீடுகளில் 40 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளையடித்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மண்ணச்சநல்லூர் அருகில் உள்ள கே.வி.ஜி.நகரை சேர்ந்தவர் அங்கப்பன். தனியார் சிமெண்ட் ஆலையில் உதவி மேலாளராக பணிபுரிந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றுள்ளார். அங்கப்பனும், மனைவி விஜயலட்சுமியும் தனியாக வசித்து வந்துள்ளனர்.

மகன், மதுபாலன், திருமணமாகி சென்னையில் தங்கியிருந்து, தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

கடந்த 9ஆம் தேதி, மதுபாலனின் குழந்தைக்கு காதுகுத்தும் நிகழ்ச்சி நடந்துள்ளது. இதற்காக அங்கப்பனும், விஜயலட்சுமியும் 7ஆம் தேதி சென்னை புறப்பட்டு சென்றிருக்கிறார்கள்.

இதையும் படிங்க: பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் சோதனை; திமுக அரசின் பாசிச நடவடிக்கை! – சீமான்

விஷேசம் முடிந்தபின்னரும் மகன் வீட்டில் தங்கி இருந்து வந்துள்ளனர். இன்று (மே 14) கே.வி.ஜி.நகரில் அங்கப்பனின் பக்கத்து வீட்டைச் சேர்ந்த சரவணன் என்பவர் வீட்டின்பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மண்ணச்சநல்லூர் சென்று வீட்டினை பார்த்துள்ளனர். அப்போது பீரோவில் இருந்த 33 சவரன் நகை மற்றும் 70ஆயிரம் பணம் கொள்ளை போனது தெரியவந்தது.

இதே போல சரவணன் வீட்டிலும் பூட்டு உடைக்கப்பட்டு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த 7 சவரன் நகை மற்றும் 4லட்சத்து 67ஆயிரம் ரொக்கம் கொள்ளை போயிருந்தது.

அடுத்தடுத்த வீடுகளில் நிகழ்ந்த கொள்ளைச் சம்பவம் குறித்து மண்ணச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.

இதையும் படிங்க: திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் – தலைநகரில் தொடரும் திக்திக்…

மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவிக்களையும் ஆய்வு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.
அடுத்தடுத்த வீடுகளில் நிகழ்ந்துள்ள கொள்ளைச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version