ITamilTv

பர்தா அணிய மறுத்த இந்துப் பெண்… காதல் கணவனின் வெறிச்செயல்!

Spread the love

இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட இஸ்லாம் மதத்தை சார்ந்து நபர் ஒருவர் மனைவியை பார்தா அணியாததால் குதி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை மாநிலத்தின் சயான் பகுதியைச் சேர்ந்த இக்பால் ஷேக் (36) என்ற டாக்ஸி டிரைவர் கடந்த 2019-ம் ஆண்டு ரூபாலி (20) என்ற இந்து பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு ரூபாலி தனது பெயரை சாரா என மாற்றிக்கொண்டார்.

கொலைசெய்யப்பட்ட பெண்

இக்பாலின் வீட்டில், சாரா பர்தா அணிந்து முஸ்லிம் பழக்கவழக்கங்களைப் பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் சாரா பர்தா அணிய முடியாது என்று கூறினார். கணவர் வீட்டில் ஏற்பட்ட தகராறு காரணமாக கடந்த சில மாதங்களாக சாரா தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனை மற்றும் விவாகரத்து குறித்து பேச வருமாறு சாராவை இக்பால் அழைத்துள்ளார்.

இந்த நிலையில் ,இரவு 10 மணிக்கு இருவரும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது சாரா விவாகரத்து கேட்டதாக தெரிகிறது.மேலும் இக்பால் சாரை வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில் குழந்தையை யார் வைத்திருப்பது என்பது தொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பர்தா அணிவது குறித்தும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

இதனால் இக்பால் தான் கொண்டு வந்த கத்தியால் சாராவின் கழுத்தை அறுத்துள்ளார். மேலும் சாராவின் கையையும் கத்தியால் வெட்டினார். இதில் சாரா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்து வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து இக்பாலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் “கடந்த சில மாதங்களாக சாரா குழந்தையுடன் தனியாக வசித்து வந்ததாக சாராவின் பெற்றோர் தெரிவித்தனர். இக்பால் குடும்பத்தினர் பர்தா அணிய வற்புறுத்தியதாக சாராவின் பெற்றோர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் காவல் துறையினர் இறங்கி உள்ளனர்.

காதலித்து திருமணம் செய்த பெண்ணை பர்தா அணியாததால் கணவனே கொலை செய்த சம்பவம் ஆப்பகுதில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Spread the love
Exit mobile version