ITamilTv

அடங்காத சிவாஜி கிருஷ்ணமூர்த்தி – லெப்ட் ரைட் வாங்கிய ராதிகா

rathika sarathkumar

Spread the love

சரத்குமாரையும் தன்னையும் அநாகரிகமாகப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை, ஏன் டா படுபாவி! ஜெயிலுக்குப் போயும் நீ திருந்தமாட்டியா ? என்று நடிகை ராதிகா லெப்ட் ரைட் வாங்கி இருக்கிறார்.

திமுகவின் பேச்சாளராக இருப்பவர் சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து இவர் தரக்குறைவாக பேசினார். இது தொடர்பாக போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக அரசியல் கட்சியினரும் கண்டனக் குரல் எழுப்பினர். இதையடுத்து திமுக தலைமை அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட பொறுப்பில் இருந்தும் நீக்கியது. புகாரின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டவர் பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இதனை தொடர்ந்து, தனது செயலுக்கு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி வருத்தம் தெரிவித்ததால், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்வதாக அறிவித்தது திமுக தலைமை. அதன்பின்னர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அடக்கி வாசித்த நிலையில், மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார். தேர்தல் பிரசாரக்கூட்டத்தில், சரத்குமார் மற்றும் ராதிகா குறித்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வெளியான நிலையில், நடிகை ராதிகா சரத்குமார் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் லெப்ட் ரைட் வாங்கி உள்ளார்.
ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே…அவங்களதான் குத்தம் சொல்லணும். இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும்., shame on #dmk @mkstalin @Udhaystalin disgraceful என்று பதிவிட்டுள்ளார்.

ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா?


Spread the love
Exit mobile version