ITamilTv

நீர் மோர் பந்தல் அமைப்போம்! – உதயநிதி ட்விட்

uthayanithi 01

Spread the love

வெயில் காலத்தில் மக்களின் தாக்கத்தை தீர்க்க நீர், மோர் பந்தல்களை அமைப்போம் என்று திமுகவினருக்கு இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி அறிவுறுத்தி உள்ளார்.


இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில அவர் பதிவிட்டுள்ளதாவது;-
தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. ‘வெப்ப அலை வீசக்கூடும்’ என வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த கடும் வெயில் காலத்தில் மக்களின் தாகத்தை தீர்க்க, நீர் – மோர் பந்தல்களை அமைப்பதுடன், கால்நடைகள் எளிதில் நீர் பருகுவதற்கான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுப்போம்.
கோடைக் காலங்களில் ஏற்படும் உடல் நலக்குறைவை தவிர்க்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, விழிப்புணர்வுடன் செயல்படுவோம்.
இவ்வாறு அவர் தெரித்துள்ளார்.

இதையும் படிங்க: தாகம் தணிக்க தண்ணீர் பந்தல் – அதிமுகவினருக்கு எடப்பாடியார் அன்பு வேண்டுகோள்

அதிமுக சார்பில் 25ஆம் தேதி முதல் தாகம் தணிக்க தண்ணீர் பந்தல்களை திறக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது திமுக சார்பில் நீர் – மோர் பந்தல்களை திறக்க உதயநிதியும் ட்வீட் செய்துள்ளார்.
பொதுமக்களின் தாகத்தை தணிப்பதில் யார் தீவிரம் காட்டுகிறார்கள்? யார் அமைக்கும் தண்ணீர் பந்தலில் வெறும் பானை மட்டும் இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று இப்போதே இணையத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version