ITamilTv

தமஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா

tmjk water (17)

Spread the love

தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் நெல்லை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.

கோடை வெயிலில் பொதுமக்களின் தாகம் தீர்க்க பல்வேறு அரசியல் கட்சிகளும் தண்ணீர் பந்தலை ஆங்காங்கே திறந்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தெற்குப்பட்டி கிராமத்தில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா நடைபெற்றது.
தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் மாநிலச் செயலாளர் தாழையூத்து உமர் பாரூக் மற்றும் ஜமாத் தலைவர் இஸ்மாயில் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.


மானூர் ஒன்றிய செயலாளர் ஹேமல் முகமது, ஒன்றிய துணை செயலாளர் ரபீக், கிளைத் தலைவர் பசீர், கிளைச் செயலாளர் நிஜாம், பொருளாளர் ஹக்குல், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Spread the love
Exit mobile version