ITamilTv

அண்ணாமலை ஏன் பயப்படுகிறார்? – பியூஸ் மானுஸ் கேள்வி!

pieus manoosh

Spread the love

திமுகவின் வழக்குகளை சந்திக்கத் தயாராக இருப்பதாகக் கூறும் அண்ணாமலை தனது வழக்கு குறித்து ஏன் பயப்படுகிறார் என சமூக ஆர்வலர் பியூஸ் மானுஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக உண்மையை பேசியதற்காக என் மீதும், பா.ஜ.க அரசு மீதும் திமுக அரசு பல்வேறு வழக்குகளை தொடர்ந்துள்ளது. மீண்டும் என் மீது புதிதாக ஒரு வழக்கு தொடர அரசு அனுமதி அளித்துள்ளது. உண்மையை பேசியதற்காக வழக்கு தொடர்வதுதான் திமுகவின் வாடிக்கையாக உள்ளது. உண்மையை வெளிக் கொண்டு வருவதில் இருந்து திமுகவால் எங்களை தடுத்து நிறுத்தமுடியாது. எத்தனை வழக்குகள் தொடர்ந்தாலும் அவற்றைச் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதாக நாளேடு ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

இதனைப் தனது எக்ஸ் தளப் பக்கத்தில், பதிவிட்டு, அண்ணாமலைக்கு கேள்வி எழுப்பியிருக்கிறார் சமூக ஆர்வலரான பியூஸ் மானுஷ்.
தான் தொடர்ந்த வழக்கு ஒன்றில் “பியூஷ் புகாருக்குப் பிறகு எனது உடல் மற்றும் மன ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது. எனது மன உளைச்சலை பணத்தால் ஈடுகட்ட முடியாது” என்று எதற்காக உயர்நீதிமன்றத்தில் கெஞ்சினீர்கள். ! நீங்கள் தான் பெரிய ஆளேச்சே!! என்று பதிவிட்டிருக்கிறார்.

Why plead like this annamalai ! Nee than periya aallu acchi !!


Spread the love
Exit mobile version