ITamilTv

புலி நடமாட்டம் – வீடுகளில் முடங்கிய மக்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கும் அரசு

Nilgiri People paralyzed by tiger poaching Government providing food items

Spread the love

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, ஊருக்குள் புலி புகுந்ததால் மக்கள் பணிக்குச் செல்லாமல் அச்சத்தில் வீடுகளுக்குள் முடங்கிக்கி உள்ளனர். இந்நிலையில் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிகாரிகள் வழங்கினர்.
தேவன் எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் முயற்சியில், வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

Nilgiri People paralyzed by tiger poaching Government providing food items

இது குறித்து அப்பகுதியில் நேற்று முன்தினம், ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, புலியைப் பிடிக்கும் வரை மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வீடுகளுக்கு கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தார்.
அதன்படி, அங்குள்ள 120 குடும்பங்களுக்கு, சுமார் ஒரு வாரத்திற்கு தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.


Spread the love
Exit mobile version