Site icon ITamilTv

செந்தில் பாலாஜிக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு – நீதிபதி அல்லி அதிரடி உத்தரவு!

Former Minister Senthil Balaji transfer case

Former Minister Senthil Balaji transfer case

Spread the love

Senthil Balaji case : சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் தாக்கல் செய்த மனுவிற்கு அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சி காலத்தில் சட்டவிரோத பண பரிமாற்ற குற்றத்தின் அடிப்படையில் பணி நியமனங்களுக்கு பணம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்து இருந்தார்.ஆனால் இந்த மனு மீதான விசாரணை உத்தரவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்திருந்தது.

இதையும் படிங்க: Senthil balaji case |”அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு..” எதிர்த்த அமலாக்கத்துறை.. நீதிமன்றத்தின் அதிரடி முடிவு!!

இதனை தொடர்ந்து,வங்கி ஆவணங்களை வழங்கி, அதன் அடிப்படையில் வாதங்களை முன்வைக்க அனுமதி கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்று கொண்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்,கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த உத்தரவிட்டது.

அப்போது வங்கி தொடர்பான அசல் ஆவணங்களை செந்தில் பாலாஜியிடம் வழங்கியது. இதையடுத்து, இரு தரப்பிலும் வாதங்கள் முடிவடைந்து, இன்று (ஏப்ரல் 30) உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி அல்லி தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் 32ஆவது முறையாக நீடிப்பு

இந்நிலையில், நீதிமன்றம் அசல் காசோலைகளை (செலான்களை) வழங்க உத்தரவிட்ட நிலையில், வங்கி தாக்கல் செய்த காசோலைகளில் இரண்டு காசோலைகள் நகலெடுக்கப்பட்டவை என்பதால், நீதிமன்ற உத்தரவுப்படி அசல் காசோலைகளை ஒப்படைக்க வங்கிக்கு உத்தரவிட வேண்டுமெனவும், அதுவரை அமலாக்கத்துறை வழக்கின் விசாரணையைத் தள்ளிவைக்க வேண்டுமெனக் கோரியிருந்தார்.

இந்த மனுமீதான விசாரணை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார். இதன் மூலம் அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. இதன் மூலம் 36வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version