தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் ( Exam results ) வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அமைக்கைப்பட்ட 3,302 தேர்வு மையங்களில் 7.72 லட்சம் மாணவர்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர் .
தமிழகம் முழுவதும் சிறப்பாக நடைபெற்ற இந்த பொதுத்தேர்வு மார்ச் 22ம் தேதியோடு வெற்றிகரமாக முடிந்தது .
Also Read : சுற்றுலா பயணிகளுக்கான இ-பாஸ் – வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட நீலகிரி ஆட்சியர்
இந்நிலையில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணியளவில் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
மாணவர்கள் dge.tn.gov.in மற்றும் tnresults.nic.in ஆகிய இணையதளங்களில் தங்களின் தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம்;
EMIS இணையதளத்தில் பதிவு செய்த தொலைபேசி எண்ணுக்கும் மாணவர்களின் தேர்வு முடிவுகள் ( Exam results ) குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.