நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலியை மதரீதியாக பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரியால் தாக்கிப் பேசியது நாடு முழுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ரமேஷ் பிதூரியாலுக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் .
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவரது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் .
இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :
நாடாளுமன்றத்தில் பாஜக உறுப்பினர் ரமேஷ் பிதூரியால் தரக் குறைவான, கடும் சொற்களால் தாக்குதலுக்கு ஆளான பகுஜன் சமாஜ் நாடாளுமன்ற உறுப்பினர் டேனிஷ் அலி அவர்களுக்கு ஆதரவினை தெரிவிக்கிற கடிதமும், நாடாளுமன்ற அவைத் தலைவர் மாண்புமிகு ஓம் பிர்லா அவர்களுக்கு அத்துமீறிய ரமேஷ்பிதூரி மீது கடும் நடவடிக்கை எடுக்க கோருகிற கடிதமும் இன்று அனுப்பியுள்ளேன்.
75 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் இந்திய நாடாளுமன்றம் தனது மாண்பை நிலை நாட்டுவதில் எத்தகைய வினையை ஆற்றப் போகிறது என்று உலகமே கவனித்து கொண்டிருக்கிறது ஓம் பிர்லா அவர்களே! என சு.வெங்கடேசன் எம்.பி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.