Site icon ITamilTv

world tallest அம்பேத்கர் சிலை – திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர்!

world tallest

world tallest அம்பேத்கர் சிலை - திறந்து வைத்தார் ஆந்திர முதல்வர்!

Spread the love

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலையை (world tallest) ஆந்திர மாநில முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ் மைதானத்தில் டாக்டர் அம்பேத்கரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை 400 டன் உலோகத்தால் உருவானது.

இது 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம் 206 அடியாக உள்ளது.

வரலாற்று சிறப்பு மிக்க ஸ்வராஜ் மைதானத்தில், எஃகு மற்றும் வெண்கலம் கொண்டு இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சிலை கடந்த 2 வருடங்களாக கட்டப்பட்டு வந்தது. 55 தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்களுடன், 500 முதல் 600 ஆட்களை கொண்டு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதிக்கு ஸ்மிருதி வனம் என பெயரிடப்பட்டுள்ளது. அம்பேத்கரின் சிலைக்கு அருகே பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

டாக்டர் அம்பேத்கர் சிலையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, எக்ஸ்பிரியன்ஸ் சென்டரில் அவரின் வாழ்க்கை தொடர்புடைய விஷயங்கள், எலக்ட்ரானிஸ் காட்சிகளுடன் காட்சிப்படுத்தப்படும்.

மேலும், அம்பேத்கர் வாழ்க்கையை சித்தரிக்கும் கலை படைப்புகளுடன் கூடிய 166 தூண்களும் நிறுவப்பட்டுள்ளன.

மேலும் இந்த மைதானத்தில் மினி தியேட்டர், அருங்காட்சியகம், நீரூற்றுகள், வாகன நிறுத்துமிடம், உணவு விடுதி ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

உலகின் மிக உயரமான (world tallest) இந்த சிலையை ஆந்திர மாநில முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி நேற்று திறந்து வைத்தார்.

இச்சிலை சமத்துவம், சமூக நீதியின் அடையாளம் என்பதால் ‘சமூக நீதி’க்கான சிலை என எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

https://x.com/ITamilTVNews/status/1748623053041676343?s=20

இந்திய அரசியலமைப்பின் தந்தை என்று அழைக்கப்படும் அம்பேத்கரின் இயற்பெயர் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர். இவர் 1891 ஆம் ஆண்டு பிறந்தார்.

அம்பேத்கர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது இவரது இறப்புக்குப் பின் 1990-ம் ஆண்டு வழங்கப்பட்டது.

இதையும் படியுங்க : dmk youth wing Meeting-முதல்வர் சேலம் வருகை!

இவர் இந்திய நாட்டின் விடுதலைக்குப் பின் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராகவும் பதவியேற்றார். இந்திய நாட்டின் சட்ட புத்தகத்தை உருவாக்கியவர் என்ற பெருமையும் பெற்றவர்.


Spread the love
Exit mobile version