Site icon ITamilTv

வயநாடு நிலச்சரிவில் குடும்பத்தினரை இழந்த இளம்பெண் சாலை விபத்தில் வருங்கால கணவரையும் இழந்த சோக நிகழ்வு..!!

kerala young woman

kerala young woman

Spread the love

கேரளாவை புரட்டிப்போட்ட வயநாடு நிலச்சரிவில் தாய் உள்பட குடும்பத்தினர் 9 பேரை இழந்த இளம்பெண், சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்த சோக நிகழ்வு அரங்கேறி உள்ளது.

வயநாடு நிலச்சரிவில் தாய் உள்பட குடும்பத்தினர் 9 பேரை இழந்த ஸ்ருதி என்ற இளம்பெண், சாலை விபத்தில் தனது வருங்கால கணவரையும் இழந்துள்ளார் . இதே விபத்தில் ஸ்ருதி உள்பட 8 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் .

Also Read : ஐஐடியில் படித்த 8,000 மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை – வெளியான பகீர் தகவல்..!!!

பள்ளிக்காலம் முதல் நண்பர்களான ஜென்சன் – ஸ்ருதி, வரும் டிசம்பரில் திருமணம் செய்ய இருந்தனர். ஆனால், குடும்பம், வீடு, நகை, பணம் என சகலத்தையும் நிலச்சரிவு பறித்துச் செல்ல, பரிதவித்து நின்ற ஸ்ருதிக்கு ஆறுதலாக இருந்துள்ளார் ஜென்சன்.

கல்பெட்டா அருகே கடந்த 10ம் தேதி ஜென்சன் ஓட்டிச் சென்ற ஆம்னி வேன், எதிரே வந்த பேருந்து மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஜென்சன், ஸ்ருதி மற்றும் காரில் இருந்த 7 பேர் படுகாயமடைய, வென்டிலேட்டர் பொறுத்தப்பட்ட ஜென்சன் நேற்று மரணமடைந்தார்

இளைஞர் ஜென்சனின் மரணத்திற்கு கேரள முதலமைச்சர், முன்னணி திரைப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version