Tamilnadu

“தேர்தல் அறிக்கை ஒன்று… நடைமுறை வேறு?” – தவெக அரசை குறித்த தினகரன்!

தமிழ்நாட்டில் புதிய அரசு பொறுப்பேற்றதையடுத்து பல அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. அதில் முக்கியமாக, 500 யூனிட் மின்சாரம் வரை பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்ற திட்டத்தில் முதலமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து அரசியல் வட்டாரங்களில் பல்வேறு கருத்துகள் எழுந்து வருகின்றன.

இதுகுறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது விமர்சனத்தை பதிவு செய்துள்ளார். தேர்தல் அறிக்கையில் மாதத்திற்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று கூறியிருந்த நிலையில், தற்போது இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் என அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இது தேர்தல் வாக்குறுதியுடன் முரண்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், தேர்தல் அறிக்கையில் கூறியதை முழுமையாக நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டும் என்றும் தினகரன் வலியுறுத்தினார். இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் என்ற அறிவிப்பை திருத்தி, மாதத்திற்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *