Site icon ITamilTv

கோவையில் நடைபெற உள்ள திமுக முப்பெரும் விழாவுக்கான தேதி மாற்றம்..!!

DMK grand festival

DMK grand festival

Spread the love

கோவையில் ஜூலை 14-ம் தேதி நடைபெறவிருந்த திமுகவின் முப்பெரும் விழாவுக்கான மாற்றப்பட்டுள்ளதாக ( DMK grand festival ) திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :

திமுக தலைவர் அவர்களின் தலைமையில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 8 ) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற “திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில்” நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி,

முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா

Also Read : விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்..!!

சீர்மிகு தமிழ்நாட்டு வெற்றிக்கு திமுகவை வழிநடத்திச் சென்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர், அவர்களுக்குப் பாராட்டு விழா என “முப்பெரும் விழா” ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஜூன் 14 ஆம் தேதிக்கு பதிலாக “ஜூன்-15ஆம் தேதி மாலை 4 மணியளவில் கோயமுத்தூர் கொடிசியா மைதானத்தில்” நடைபெறுகிறது.

திமுக தலைவர் அவர்களின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் நம் கூட்டணிக் கட்சித்தலைவர்கள், வெற்றிபெற்ற நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்கிறார்கள்.

அனைத்துக் மாவட்டங்களில் இருந்தும், திமுக மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய-நகர-பகுதி-பேரூர்-கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், வாக்குச் சாவடி முகவர்கள், கழக உடன்பிறப்புகள் அனைவரும் கலந்து கொள்வதற்கான ( DMK grand festival ) ஏற்பாடுகளை அந்தந்த மாவட்ட திமுக செயலாளர்கள் செவ்வனே மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என துரைமுருகன் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version