World

ஈரானில் தொடர் பதற்றம்.. $100 மில்லியன் விமானத்தை தானே நாசம் செய்த அமெரிக்க ராணுவம்!!

ஏப்ரல் 3ஆம் தேதி, F-15E ஸ்ட்ரைக் ஈகிள் போர் விமானம் ஈரானின் வான் எல்லைக்குள் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் இருந்த இரண்டு அமெரிக்க விமானிகளும் பாதுகாப்பாக வெளியேறினர்.

அவர்களில் ஒருவரை உடனடியாக மீட்ட நிலையில், மற்றொருவரை மீட்க அமெரிக்க இராணுவம் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டது.

இரண்டாவது விமானியை மீட்கும் முயற்சியின் போது, ஈரானில் உள்ள ஒரு தற்காலிக பாலைவன விமான தளத்தில் அமெரிக்கா போக்குவரத்து விமானங்களை பயன்படுத்தியது.

ஆனால், தரையிறங்கிய பிறகு சில விமானங்கள் தொழில்நுட்ப கோளாறு அல்லது மென்மையான மணற்பரப்பில் சிக்கியதால் செயலிழந்தன. இதனால் மீட்பு பணியில் சிக்கல் ஏற்பட்டது.

இந்த சூழலில், ஈரானிய படைகள் அருகில் வந்ததால், மீட்பு நடவடிக்கையை விரைவாக முடிக்க கூடுதல் விமானங்கள் அனுப்பப்பட்டன.

பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்ற இரண்டு போக்குவரத்து விமானங்களை எதிரிகளின் கைக்கு செல்லாமல் தடுக்க, அமெரிக்க இராணுவம் அவற்றை தானாகவே வெடிக்கச் செய்தது.

இந்த நடவடிக்கை, முக்கிய இராணுவ தொழில்நுட்பங்கள் மற்றும் ரகசிய தகவல்கள் எதிரிகளிடம் செல்லாதபடி பாதுகாக்கும் வழக்கமான நடைமுறையாகும்.

இதற்கு முன் ஒசாமா பின்லேடன் மீது நடத்தப்பட்ட தாக்குதலின்போதும் இதே முறையை அமெரிக்கா பயன்படுத்தியது.

மேலும், ஈரானிய ஊடகங்களில் வெளியான தகவலின்படி, சேதமடைந்த விமானங்கள் அதிக மதிப்புடைய C-130 வகையைச் சேர்ந்தவை என கூறப்படுகிறது.

இதற்கிடையில், அமெரிக்கா மற்றொரு விமானியையும் பாதுகாப்பாக மீட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *