ITamilTv

யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேசமாட்டேன் – நீதிபதியிடம் சவுக்கு சங்கர் சொன்னதாக தகவல்

savukku shank

Spread the love

இனி யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச மாட்டேன் என நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

போலீசார் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சைபர் க்ரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அங்கு அவரது கை உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிரைத்துறையினர் அவரை துன்புறுத்துவதாகவும், இது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், சங்கரின் தாயார் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கி விசாரணையின்போது, 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர்.
என்னை மோசமாக அடிக்கின்றனர். விசாரணையை என்று அடிக்கிறார்கள். இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: சவுக்கு கையை உடைத்தவர் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமாரா?

இதற்கு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன்.
நான் விசாரணை மேற்கொள்ளும் வரை தைரியமாக இருக்கும்படியும் சவுக்கு சங்கரிடம் நீதிபதி கூறியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன் பேட்டி அளித்துள்ளார்.

இந்த ஆட்கொணர்வு மனுமீது இன்று மீண்டும் விசாரணை நடந்தது. அப்போது, அரசுத் தரப்பு வழக்கறிஞர் ராஜ்திலக், சிறையில் சவுக்கு சங்கர் கொடுமைப்படுத்தப்படவில்லை.
அவருக்கு சிறைக்கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம். அதனால் அவர் தாக்கப்பட்டிருந்தால் அரசு பொறுப்பேற்க முடியாது என தெரிவித்தார்.

மேலும், சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது.

சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதே நேரம், மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

அதனால், மருத்துவர்கள் அறிக்கைபடி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: கஞ்சா வழக்கு :துணைபோகும் போலீசார் மீது நடவடிக்கை தேவை – அன்புமணி!


Spread the love
Exit mobile version