தனது கையை உடைத்தவர் கோவை சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார்தான் என்று சவுக்கு சங்கர் கூறியிருப்பது பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/savukku-sankar-02-1.jpg?resize=1024%2C576&ssl=1)
பெண் போலீசார் குறிந்து அநாகரீகமாகப் பேசிய புகாரில் யூடியூபர் சவுக்கு சங்கரை, தேனியில் வைத்து கோவை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் சவுக்கு சங்கர் கஞ்சா வைத்திருந்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே போல கிளம்பாக்காம் பேருந்து நிலையம் குறித்து தவறான ஆவணங்களை காட்டியதாகவும் மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் மீது 7க்கும் மேற்பட்ட வழக்குகள் தற்போது வரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: கணவரை உயிருடன் மீட்டுத் தாருங்கள் -பெலிக்ஸ் ஜெரால்டு மனைவி கண்ணீர்
இந்த நிலையில் கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சவுக்கு சங்கரை 10க்கும் மேற்பட்ட காவலர்கள் தாக்கியதாகவும், அதில் கை உடைந்ததாகவும், அவரது தரப்பு வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது போலவே, கஞ்சா வழக்குக்காக மதுரை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சவுக்கு சங்கரின் வலது கை உடைக்கப்பட்டு கட்டுப் போடப்பட்டிருந்தது.
இதன்பின்னர் நீதிமன்ற உத்தரவுப்படி கோவை மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு கைக்கு மாவுக்கட்டு போடப்பட்டது.
இந்தநிலையில் மறு சிகிச்சைக்காக மீண்டும் கோவை மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/savukku-sankar-01-2.jpg?resize=1024%2C576&ssl=1)
அவருக்கு அந்த பழைய மாவு கட்டு அவிழ்க்கப்பட்டு புதிதாக மாவு கட்டு போடப்பட்டது.
சிகிச்சை முடிந்து வெளியில் அழைத்து வரப்பட்டபோது சவுக்கு சங்கர் பகீர் தகவலை வெளியிட்டார்.
” சிறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தான் தன் கைகளை உடைத்ததாக அவர் கூறினார்.
கோவை சிறையில் தான் தனக்கு சமாதி என்று அவர் மிரட்டுவதாகவும் கூறினார். கோவை சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அவர் அப்போது அச்சம் தெரிவித்தார்.
இதன் பின்னர் அவரை போலீசார் கோவை சிறைக்கு பலத்த பாதுகாப்போடு அழைத்து சென்றனர்.
![](https://i0.wp.com/itamiltv.com/wp-content/uploads/2024/05/savukku-sankar-03-1.jpg?resize=1024%2C576&ssl=1)
காவல்துறையினர் சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்கும் மனுவானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளனர்.
இதையும் படிங்க: நாகை எம்.பி. செல்வராஜ் திடீர் மறைவு- முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!