Site icon ITamilTv

ஜூன் 14 ஆம் தேதி இத்தாலி செல்கிறார் பிரதமர் மோடி..!!

italy

italy

Spread the love

ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜூன் 14 ஆம் தேதி பிரதமர் மோடி இத்தாலி செல்ல ( Italy ) உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

ஜி7 அமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் 50-வது உச்சி மாநாடு இத்தாலியின் ஃபசானோ நகரில் வரும் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை வரை நடைபெறுகிறது.

Also Read : விவசாயிகளையும் விவசாயத்தையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் – டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்..!!

இந்நிலையில் இந்த மாநாட்டை நடத்தும் இத்தாலி அரசு சார்பில் இந்தியா, சவுதிஅரேபியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது.

இதன்காரணமாக ஜூன் 14 ஆம் தேதி பிரதமர் மோடி இத்தாலி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

3-வது முறை இந்தியாவின் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக ( Italy ) இத்தாலிக்கு பிரதமர் மோடி ;செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது .


Spread the love
Exit mobile version