Site icon ITamilTv

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை” – அந்தர் பல்டி அடித்த டிடிவி!!

Spread the love

 ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.‌உள்ளிட்ட யாருக்கும் ஆதரவு இல்லை; தேர்தல் ஆணையத்தால் இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை-வருகிற 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அ.ம.மு.க. போட்டியிடும்-டி.தொலைக்காட்சி.தினகரன் பேட்டி. 
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில்  அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.தொலைக்காட்சி. தினகரன் அவர்கள்  இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை. என்னிடம் யாரும் பேசி அ.ம.மு.க.வேட்பாளரை திரும்பப்பெற வைக்கவில்லை.
ஈரோடு கிழக்கில் ஜெயிப்போம் என நம்பியதை விட நல்ல வாக்கு சதவிகிதத்தைப் பெறுவோம் என நம்பினோம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் இல்லாததால் போட்டியில்லை. குக்கர் சின்னம் இல்லாமல் வேறு சின்னத்தில் போட்டியிட்டால் குழப்பம் ஏற்படும் என்பதாலேயே போட்டியில்லை.
அ.தி.மு.க., தி.மு.க.ஆகிய 2 கட்சிகளுக்கும் ஆதரவு இல்லை. யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பது தொண்டர்களுக்குத் தெரியும். ஈரோடு கிழக்கில் தீய சக்திகளுக்கு, துரோக சக்திகளுக்கு அமமுக ஆதரவு அளிக்காது.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் குக்கர் சின்னத்தில் அ.ம.மு.க. போட்டியிடும். இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் ஏன் வழங்கவில்லை என்பது புரியவில்லை. இடைத்தேர்தலில் குக்கர் சின்னம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பிரசாரம் செய்து வந்தோம்.
இடைத்தேர்தலில், அ.தி.மு.க.விற்கு இரட்டை இலை சின்னம் கிடைத்தால் மட்டும் அவர்கள் வென்றுவிடுவார்களா? அதிமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அக்கட்சித் தொண்டர்களுக்கே இல்லை. தி.மு.க.வை வீழ்த்த வேண்டுமெனில் அம்மாவின் தொண்டர்கள் ஓர் அணியில் இணைந்து செயல்பட வேண்டும்.
ஒரே கட்சியில் இணைய வேண்டும் என்று நான் கூறவில்லை, ஓர் அணியாக இணைந்து செயல்பட வேண்டும் என்றுதான் கூறினேன். தி.மு.க. இந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற அதிகாரத்தைப் பயன்படுத்தி பணத்தை அதிகமாகச் செலவு செய்கிறது.
ஓ.பி.எஸ். எனது நண்பர் மற்றும் அவர் மீது தனிப்பிரியம் உண்டு. நாங்கள் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடாததற்குக் காரணம் தேர்தல் ஆணையம் மட்டுமே. எந்த அரசியல் காரணமும் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி அணிக்கு 2 இலை சின்னம் கிடைத்ததாலும் வெற்றி இல்லை.
2 இலைக்கான சக்தி இனி இல்லை. ஏனென்றால் அது தவறான நபர்களின் கையில் உள்ளது என்றார்

Spread the love
Exit mobile version